garments

திருமனத்திற்கு ஆடைத்தொழில்
         ஒரு தடையா?
    
உலக பொருளாதாரத்தில் வருமானத்தை ஈட்டித்தருவோரில் முதன்மையாக இருப்போர் பெண்களே. இதில் ஒரு பகுதியை ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் பெண்கள் ஆக்கிறமிக்கின்றனர். இந்த சமூகமானது ஆடை உற்பத்தியில் ஈடுபடும் பெண்களின் வருமானத்தை எதிர்ப்பார்க்கினறது;, உழைப்பை உருஞ்சுகின்றது. ஆனால் இந்தப் பெண்களை ‘கார்மன்ட்’ பிள்ளைகலா ஐயோ என முகம் சுழிக்கின்றனர்.
           
             “ எந்த ஊர்லயாவது தான் வேல பாக்குர இடத்தை சொல்லாம இருப்பாங்களா? இங்க எங்களால சுதந்திரமா நாங்க வேல செய்யிர இடத்த சொல்லமுடியுதில்ல. அப்பா அம்மா பயப்படராங்க நாங்க ‘கார்மன்ட்ல’ வேலை செய்யிர பிள்ளையென்டா என்கட கல்யாணம் பாதிக்கும் என்டு.” இவ்வாரு தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து கொள்கிறார் நீண்ட நாட்களாக ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் சாந்தி(வயது24)

             இந்த நிலை இவர்களுக்கு மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச்செல்லும் பெண்களையும் இந்த சமூகம் விட்டுவைக்க வில்லை. இவ்வாரானதொரு நிலைக்கு அந்தப் பெண்களைத் தள்ளியது பெரும்பாலும் ஊடகங்களேயாகும். இவர்களின் திரமைக்கோ அல்லது ஆலுமையை வெளிக்கொண்டு வரும் வகையிலோ ஊடகங்கள் செயற்படுவதில்லை. அதற்கு முற்றிலும் மாறாக அவல்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் பாலியலள் ரீதியில் துன்புருத்தப் படுவதையுமே மிகத் தெளிவாக படம் போட்டுக் காட்டுகின்றன.

            இவற்றையே பார்த்துப் பளகிய சமூகம், ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் எல்லாப் பெண்களையும் தவரானதொரு  கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெண்களின் மனங்களில் பயம் குடிகொள்கிறது. ‘ரொம்ப தூரத்தில இருந்து வந்து இங்க வேலை செய்யிரம் ‘நைட்’ வேலை செய்யனும் சில நேரம் 11மணி மட்டும் வேல செய்யனும் அந்த நேரம் கூட்டி போக யாரும் இல்ல. அதோட கல்யாணம் பேசினா கன்டபடி கேல்வி கேப்பாங்க. மாப்பிள்ள சும்மா இருந்தாலும் அவங்க குடும்பம் சும்மா இருக்காது. இப்படி இருக்கும் போது நாங்க நாங்களா ஒரு வாழ்க்கைய தெரிவு செய்ய வேன்டியதாகிடுது’ என்று தனது பக்கத்தை தெளிவு படுத்துகின்றார். ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த ஒருவரை திருமணம் முடித்த பரமேஸ்வரி(வயது26)

             எதிர்காலத்தின் மீது கொண்ட பயத்தால் அவர்களது வாழ்க்கை திசைமாறுகின்றது. ஓவ்வொரு பெண்ணும் பயந்து பயந்து தொழிற்சாலைக் குள்ளே தங்களது வாழ்க்கையை வட்டமிடுகின்றனர். இவர்கள் வெளியுலகம் என்ன சொல்லுமென நினைத்து தானாக ஒரு வாழ்க்கையை நிர்னயிக்கின்றனர். நீ விரும்புபவனை விட உன்னை விரும்புபவனை ஏற்றுக்கொல் இது உலக பலமொழி இதையே தாரக மந்திரமாக ஏற்று இந்தப் பெண்களும் நடைமுறைப் படுத்துகின்றனர்.

             தங்களது வாழ்க்கையை மாற்றியமைக்க படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்புக்கும் ஆளுமைக்கும் சம்மந்தம் கிடையாது. படிப்பால் ஆளுமை வழராது. ஓவ்வொருவரது அனுபவமே அவர்களது வாழ்க்கை. சந்தர்ப்பத்தை புரிந்து செயற் படும் ஆற்றலை வழர்த்து கொள்வதால் தங்களுக்கென்று இச் சமூகத்தில் ஒரு இடத்தை தக்கவைத்துக்; கொள்ள முடியும். ஆளுமையை வழர்ப்பதற்கு எந்த கடைகளிலும் மருந்து கிடையாது. மனதைரியமே அவர்களுக்கு மருந்து.